இறைவனை நேசியுங்கள்
உன் இதயத்தின் மோனத்துள் ஆழ்ந்து மிக ஆழ்ந்து செல். அங்கே பிரபு பிரகாசத்துடனும், கருணையுடனும் இருப்பதைக் காண்பாய்.
தவம் - ஒரு கற்பனையோ எண்ணப் பதிவோ அல்ல. அது ஒர அனுபவம். அதில் கிடைக்கிற மகிழ்ச்சி நிலையானது, ஆற்றல் மிக்கது.
வெளியே ஒரு உலகம், உள்ளே ஒரு உலகம். நீ வெளியுலக நிகழ்வுகளுக்கு ஆட்பட்டுவிடின் அண்ணலின் அமைதியையும், மகிழ்ச்சியையும் உன்னால் தக்க வைத்துக் கொண்டிருக்க முடியாது. உள்நோக்குடன் இரு. உள்ளார்ந்த வாழ்வில் கவனம் செலுத்து. உன்னுடைய ஆர்வத்தைப் போலவே, பிரபுவின் இருப்பிலும் கருத்துடையவனாக இரு. அக்கறை காட்டு.
தவம் என்பது - இறைவன்பால் உள்ள அனைத்தையும் தழுவிய அன்பில் ஆழ்ந்து மூழ்கி இருப்பது.
நீ இறைவனால் நேசிக்கப்படுவது எத்தனை முக்கியமோ அத்தனை முக்கியம் இறைவனை நீ நேசிப்பதும்.
`உங்கள் வாழ்வையும், மனதையும் தாங்கி நிறுத்துவது ஆன்மா. அது தெய்வீகப் பேரொளியின் சின்னப் பொறி.
இயற்கை மாறமுடியும். உங்களுடைய யோக சாதனை மூலம் அதை நீங்கள் மாற்ற முடியும். இறையருளில் நடவாதது எது? இது சாத்தியமே இல்லை என்று நீங்கள் நினைப்பதெல்லாம் நடக்கவே செய்யும். பேரருள் - மாற்றங்களின் பின்னணியில்'.
உலகம் உண்மையிலேயே துயரம் நிறைந்ததுதான். ஆனால் அதை உருமாற்றம் செய்ய முடியும்.
- அன்னை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment